

மும்பை
கடன் வழங்கும் சேவையிலிருந்து வெளியேற முடிவு செய்துள் ளதாக ரிலையன்ஸ் கேபிடல் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மதிப்பு ரூ. 8 ஆயிரம் கோடியாகும். இந்நிறுவனத்தில் ரிலையன்ஸ் கேபிடலுக்கு 51 சதவீத பங்குகள் உள்ளன. ரிலையன்ஸ் கேபிடல் ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களை சீரமைக்கும் பணி டிசம்பருக்குள் நிறைவடையும். இதன் மூலம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்துக்குள்ள கடன் சுமை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்குக் குறையும் என்று சுட்டிக்காட்டினார்.
இதுவரை ரிலையன்ஸ் குழுமம் ரூ. 35 ஆயிரம் கோடி கடனை கடந்த 4 மாதங்களில் திருப்பி செலுத்தியதாகவும் குறிப் பிட்ட அவர், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.15 ஆயிரம் கோடியை செலுத்த உள்ளதாகவும் நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடி கடனைத் திரும்ப செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வங்கிகள், வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் எதுவும் கடன் வழங்காத நிலையில் ஒரு தனியார் நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடி கடனை திரும்பச் செலுத்துவது மிகப் பெரிய தொகை என்றும் அவர் குறிப்பிட்டார்.