Published : 26 Sep 2019 09:34 AM
Last Updated : 26 Sep 2019 09:34 AM

இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமென்றால் எரிசக்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் கருத்து

புதுடெல்லி

இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டு மென்றால், அது எரிசக்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவை மீண்டும் 8 முதல் 9 சதவீத வளர்ச்சி கொண்டுள்ள நாடாக மாற்ற மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது. அந்த வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள் வதே அரசு முன் இருக்கும் மிகப் பெரிய சவால் ஆகும். தற்போதைய நிலையில் ஒரு நாடு தொடர்ந்து வளர்ச்சியில் இருக்க வேண்டும் என்றால் அது எரிசக்தி துறையில் கவனம் செலுத்துவது அவசியம்’ என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது இந்தியா பொருளா தார சரிவை எதிர் கொண்டுள்ளது. அதிலிருந்து மீட்கும் முயற்சியாக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக சரிந்தது.

அதேபோல் வேலையின்மையும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலை யில் தற்போதையை பொருளா தார சரிவிலிருந்து இந்தியாவை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதலீடுகளை அதிகரிக்கும் விதமாக சில திட்டங்களை அறி வித்து வருகிறது. கடந்த வாரம் நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீதம் அளவில் குறைக்கப்பட்டது. அதேபோல் கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங் கிகளாக மாற்றுவதற்கான அறி விப்பை மத்திய அரசு வெளியிட்டது. ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள் வதே இந்தியாவின் முன் இருக்கும் சவால் என்று அவர் தெரிவித் துள்ளார்.

‘2017-18 நிதி ஆண்டில் இறுதி காலாண்டில் நாட்டின் வளர்ச்சி வீதம் 8.1 அளவில் இருந்தது. ஆனால் தற்போதைய முதல் காலாண்டில் அது 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் 8 முதல் 9 சதவீத வளர்ச்சியை எட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைப்பதே அரசின் முன் இருக்கும் முக்கிய சவால்.

தற்போதையை நிலையில் நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டு மானால், எரிசக்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும். எரிசக்தி துறையில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைய முடியாது. உலக சராசரி எரி சக்தி நுகர்வில் மூன்று ஒரு பங்கே இந்தியாவின் நுகர்வு உள்ளது. இது பலமடங்கு உயர்வது அவசியம்’ என்று அவர்தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x