மீண்டும் உயர்ந்த தங்க விலை: இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் உயர்ந்த தங்க விலை: இன்றைய நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று ரூ.288 உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.228 அதிகரித்து ரூ.28 ஆயிரத்து 960-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்தது.

இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கிடையே செப்.4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 228 ரூபாய் குறைந்து ரூ.28 ஆயிரத்து 960 ஆக விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு 36 ரூபாய் அதிகரித்து 3,620 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 8 கிராம் சுத்தத் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு 216-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது

அண்மையில் வெள்ளி விலையும் குறைந்த நிலையில் தங்கத்தைப் போலவே வெள்ளியின் மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 60 காசுகள் அதிகரித்து ரூ.50.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.50,300-க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in