Published : 01 Sep 2019 10:24 AM
Last Updated : 01 Sep 2019 10:24 AM
புதுடெல்லி
ஊதுபத்தி போன்ற நறுமண பொருட்களின் இறக்குமதிக்கு இந் திய அரசு புதிய கட்டுப்பாடு களை விதித்துள்ளது.
ஊதுபத்தி மற்றும் அதுபோன்று எரிக்கப்படுவதன் மூலம் நறுமணம் பரப்பும் பொருட்கள் சீனா மற்றும் வியட்நாமில் இருந்து அதிக அளவில் இந்தியாவுக்கு இறக்கு மதி செய்யப்படுகின்றன. இந்நாடு களில் இருந்து ஊதுபத்தி இறக்கு மதி செய்வதற்கு இறக்குமதியாளர் கள் வரி ஏதும் செலுத்த தேவை யில்லை. இதனால் முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட 2018-19 ஆண்டில் அதன் இறக்கு மதி அளவு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ஊதிபத்தி இறக்கு மதியாளர்களுக்கு இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. அதன்படி இனி ஊதுபத்தி மற்றும் அதுபோன்ற நறுமணப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் இந்திய அரசிடம் முறையான உரிமம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று வெளியிட் டுள்ளது. முடிந்த ஜூன் காலாண் டில் மட்டும் ரூ. 120 கோடி அளவில் ஊதுபத்தி போன்ற நறுமனப் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இருக் கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT