Published : 30 Aug 2019 05:35 PM
Last Updated : 30 Aug 2019 05:35 PM

வங்கிகளின் வாராக்கடன் குறைகிறது: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாராக்கடன் அளவு 7.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதுமட்டுமின்றி பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து மேலும் அவர் கூறியதாவது:
வங்கிகள் இணைப்பு தவிர வங்கித்துறை சீர்த்திருத்தம் தொடர்பாக பல அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது:
வங்கிகள் கடன் வழங்குவது தொடர்பான அறிக்கையை அளித்துள்ளன. இதனை ஆய்வு செய்து வருகிறோம். வங்கித்துறை சீர்த்திருத்தம் செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொழில்துறையை ஊக்குவிக்க வங்கி கடன் முக்கிய காரணியாக உள்ளது. எனவே வங்கிக் கடன் வழங்குவது அதிகரிக்கப்படும். ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பு நடவடிக்கை 8 வங்கிகள் ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
1.25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது, 18 பொதுத்துறை வங்கிகளில் 14 லாபத்தில் இயங்குகிறது. சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21% அதிகரித்துள்ளது.
வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது, ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கு ரூ.3,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவது தான் எங்கள் இலக்கு. நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்த்தில் வாராக்கடன் அளவு 8.65 கோடியாக இருந்தது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது 7.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x