Published : 19 Aug 2019 10:08 AM
Last Updated : 19 Aug 2019 10:08 AM

ஏழைகளை கடன் சுமையிலிருந்து மீட்க திட்டம்: திவால் சட்டத்தின் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு

புதுடெல்லி

சிறிய அளவில் கடன் பெற்று அதைத் திருப்பி செலுத்த முடியாத நெருக்கடியில் அல்லாடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற் கான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. திவால் சட்டத்தின்கீழ் இதற்கென்று ஒரு புதிய விதியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள் தங்கள் தேவைக்காக சிறு நிதி நிறுவனங்களிடமிருந்து, மிகக் குறைந்த அளவில் கடன் பெற்று வருகின்றனர். இவர்கள் போதிய வருமானம் இல்லாதபோது அந்தக் கடனை திருப்பி செலுத்துவதில் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். இதுபோன்ற கடன் நெருக்கடி அவர்களுடைய குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கிறது.

கடன் தள்ளுபடி

எனவே, இத்தகைய சிறு கடன்களால் நெருக்கடிக்குள்ளாகி இருப்பவர்களை அதிலிருந்து மீட்டு, அவர்கள் தங்கள் வாழ்க்கையை புத்துருவாக்கத்துடன் மீண் டும் தொடர்வதற்காக, அவர்களது சிறு கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திவால் சட்டத்தின்கீழ் இதற்காக புதிய விதிகளை உருவாக்க உள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கே இந்தக் கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு, சிறு நிதி நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக நிறுவன விவகாரத் துறை செயலாளர் இஞ்சேதி ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடிக்கான வரையறை

யாருக்கெல்லாம் இந்தப் புதிய திட்டம் செல்லுபடியாகும் என்பது குறித்து மத்திய அரசு சிறு நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து அதற்கான வரைமுறைகள் திவால் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள பிரிவினர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடி திட்டம் பொருந்தும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கடன் தள்ளுபடி பெறுபவரின் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். அவருடைய சொத்துமதிப்பு ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. அதேபோல், அவருடைய கடன் தொகை மதிப்பு ரூ.35 ஆயிரத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. சொந்தமாக வீடு இருக்கக்கூடாது. இந்த விதிமுறைகள் எல்லாம் பொருந்தும்பட்சத்தில் மட்டுமே, இந்தப் புதிய விதியின்கீழ் ஒருவருக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருமுறை இந்த விதியின்கீழ் கடன் தள்ளுபடி பெற்றுவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் தள்ளுபடி பெற முடியாது.

இதுகுறித்து இஞ்சேதி ஸ்ரீனிவாஸ் கூறியபோது, ‘‘இந்தக் கடன் தள்ளுபடி திட்டத்தை சிறு நிதி நிறுவனங்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடன் தள்ளுபடி திட்டத் தினால் பொருளாதார அளவில் பின்தங்கியு ள்ளவர்கள்’’ பெரும் பயன் பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x