Published : 09 Jul 2015 10:01 AM
Last Updated : 09 Jul 2015 10:01 AM
வரும் 2018-ம் ஆண்டில் இந்தியா வில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும் என்றும் அந்த எண்ணிக்கை 2023-ன் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. வெல்த் எக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.
வரும் பத்தாண்டுகளில் இந்தி யாவிலும் தென் ஆப்ரிக்கா விலும் பணக்காரர்களின் எண் ணிக்கை கணிசமாக உயரும்.
ஆடம்பரப் பொருட்கள்
இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, கல்வி அறிவு இருப்பது, தொழில்முனைவு அதிகமாக இருப்பது ஆகியவை காரணமாக பணக்காரர்களின் எண்ணிக்கை உயரும். பணக்காரர்களின் எண்ணிக்கை உயரும் போது ஆடம்பர பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும்.
இதுவரை இருந்த சாதிய முறைகளால் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. சமூக ஏற்றத்தாழ்வுகளால் பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதே போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT