Published : 15 Aug 2019 08:04 AM
Last Updated : 15 Aug 2019 08:04 AM
புதுடெல்லி
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கிரெடிட் கார்டு (கடனட்டை) வர்த்தகத்தை படிப் படியாகக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காக இந் நிறுவனம் பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட முடிவு செய்துள்ளது.
எஸ்பிஐ கார்டு மற்றும் பேமென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் எஸ்பிஐ-க்கு 74 சதவீத பங்குகள் உள்ளன. கார்லைல் நிறுவனம் வசம் 26 சதவீத பங்குகள் உள்ளன.
கிரெடிட் கார்டு வர்த்தகத்தைக் குறைத்துக் கொள்ள வங்கியின் இயக்குநர் குழுவின் மத்திய செயல் குழு ஒப்புதல் அளித்துள் ளது. வங்கிக்குள்ள பங்குகளைக் குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அறி வுறுத்தியுள்ளது. பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் (ஓஎஃப்எஸ்) அடிப்படையில் விற்பது குறித்தும் ஆராயப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. 1998-ம் ஆண்டு கடன் அட்டை வர்த்தகத்தில் எஸ்பிஐ ஈடுபட்டது. 2017-ம் ஆண்டு கார்லைல் குழுமம் ஜிஇ கேபிடலின் பங்குகளை வாங்கியது. இதில் 74 சதவீதம் எஸ் பிஐ வசமும், கார்லைல் வசம் 26 சதவீத பங்குகளும் உள்ளன.
தற்போது 60 லட்சம் பேர் எஸ்பிஐ கார்டுகளை உபயோகிக் கின்றனர். நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் ஐபிஓ வெளி யிடுவது குறித்து பரிசீலிப்பதாக ஏற்கெனவே வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT