Published : 06 Aug 2019 09:39 AM
Last Updated : 06 Aug 2019 09:39 AM

ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி தொலைத் தொடர்பு துறையை பாதித்துள்ளது: ‘ஃபிட்ச்’ தரச்சான்று நிறுவனம் தகவல்

புதுடெல்லி

முகேஷ் அம்பானிக்குச் சொந்த மான ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்புத் துறையில் களமிறங்கிய பிறகு தொலைத் தொடர்பு துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் தெரிய ஆரம்பித் துள்ளதாக தரச்சான்று நிறுவன மான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

ஃபிட்ச் நிறுவனத்தின் அறிக் கையில் கூறியிருப்பதாவது,

இந்திய தொலைத் தொடர்பு துறை சந்தையில் அடுத்தகட்ட பாய்ச்சல் நடப்பதற்கான சூழலில் சரியான நேரத்தில் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ தனது அதிரடி சலுகைகள், குறைந்த விலை சேவைகளால் ஒட்டுமொத்த சந் தையையும் தலைகீழாக மாற்றி விட்டது. அது ஏற்படுத்திய தாக் கம் இப்போது தெரிய ஆர்ம்பித் துள்ளது.

நிறுவனங்களுக்குள் இணைப்பு நடவடிக்கை மட்டுமல்லாது, சில நிறுவனங்கள் திவால் நட வடிக்கைகளுக்கும் விண்ணப்பிக் கும் நிலை உருவானது. இந்தியா வின் முன்னணி நிறுவனங்களாக இருந்த வோடபோன், ஐடியா மற் றும் ஏர்டெல் ஆகியவையும் பாதிப் புக்குத் தப்பவில்லை.

வோடபோன் -ஐடியா நிறுவனங் கள் ஒன்றாக இணைந்தும் ஜியோ வின் வளர்ச்சியைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சந்தை பங்களிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், கணிசமான வாடிக் கையாளர்களை ஜியோவிடம் இழந்ததால் இதன் லாப வளர்ச்சி குறைந்துள்ளது. வோட போன் ஐடியா வருவாய் 4 சத வீதமும், செயல்பாட்டு லாபம் 22 சதவீதமும் குறைந்துள்ளது. மொத்தம் 1.4 கோடி வாடிக்கை யாளர்களை வோடபோன் ஐடியா இழந்துள்ளது.

ஏர்டெல் தன்னுடைய நிதி நிலையில் ஓரளவு சமாளித்துக் கொண்டிருக்கிறது. ஏர்டெல் நிறு வனத்தின் செயல்பாட்டு லாபம் 7 சதவீதம் உயர்ந்துள்ளது ஆனால், அதுவும் எளிதாக நடக்கவில்லை. கடும் போட்டியைச் சந்திக் கிறது.

ஜியோவின் வருவாய் 44 சதவீதமும், செயல்பாட்டு லாபம் 37 சதவீதமும் உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x