Published : 01 Aug 2019 03:57 PM
Last Updated : 01 Aug 2019 03:57 PM

பங்குச்சந்தைகள் கடும் சரிவு: 5 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி

மும்பை
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.  கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. தங்கத்துக்கு வரி, பெட்ரோலிய பொருட்களுக்கு கூடுதல் வரி போன்ற அறிவிப்புகள் பங்குச்சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் மும்பை பங்குச்சந்தைகள் 900 புள்ளிகள் வரை சரிந்தன. 

இந்தநிலையில், இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டது. சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களும் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. 

பிற்பகல் நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 787 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்தது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு 37,000 புள்ளிகளுக்கும் குறைவாக  வீழ்ச்சியடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 110  புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 10,992 புள்ளிகளாக சரிவடைந்தது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x