Published : 10 Jul 2015 10:08 AM
Last Updated : 10 Jul 2015 10:08 AM

வோடபோன் - வால்மார்ட் கூட்டு

வோடபோன் - வால்மார்ட் நிறுவனங்கள் நேற்று முக்கிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இதன் மூலம் வால்மார்ட்டுக்கான தொகைகளை வோடபோன் எம்-பேசா மூலம் செலுத்தலாம்.

முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்துடன் முக்கிய உத்தி ரீதியிலான கூட்டு சேர்ந்துள்ளதாக கூறியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் உறுப்பினர்கள் வோடபோன் வழங்கும் எம்-பேசா சேவையை பயன்படுத்தி மொபைல் வழியாக பணத்தை செலுத்தலாம்.

இந்த கூட்டு மூலம் வால்மார்ட்டின் நவீன மொத்த விற்பனை கடைகளின் தொழில் உறுப்பினர்கள் மொபைல் மூலம் எம்-பேசா வழியாக பணத்தை செலுத்தலாம் என்று வோடபோன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் இந்த எம்-பேசா சேவையில் வால்மார்ட் உறுப்பினர்கள் பணப் பரிமாற்றம், பில் பேமண்ட்ஸ் மற்றும் ரீசார்ஜ்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இந்த வசதியை முதற்கட்டமாக லக்னோ, அமராவதி, அவுரங்காபாத், ஹைதராபாத், ராஜமுந்திரி, விஜயவாடா மற்றும் குண்டூர் வால்மார்ட் கடைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதர நகரங்களில் வால்மார்ட் விரிவாக்கம் செய்யப்படும் போதும் இந்த திட்டம் செயல்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x