Published : 15 Jul 2019 06:52 AM
Last Updated : 15 Jul 2019 06:52 AM

வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் வெளியீடு: பலன்களை விட பாதகங்களே அதிகம் - முன்னாள் திட்டக் குழு தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கருத்து

வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டத்தினால் பலன்களை விட பாதகங்களே அதிகம் என பொருளாதார வல்லு நரும் முன்னாள் திட்டக் குழு தலை வருமான மாண்டெக் சிங் அலு வாலியா கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதிப் பற்றாக்குறையை குறைக்க உள்நாட்டு நிதி சார்ந்த நடவடிக்கைகளை மட்டுமே நம்பி இருக்காமல், வெளிநாடுகளில் இருந்து நிதித் திரட்டும் வகையில் கடன் பத்திரங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.70 ஆயிரம் கோடி நிதித் திரட்ட இலக்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த முடிவு சரி யானது அல்ல என்று மாண்டெக் சிங் அலுவாலியா தெரிவித்துள் ளார். அவர் அதற்கான காரணங் களையும் அடுக்குகிறார்.

முன்பே இதுபற்றி பலமுறை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதா கவும், ஆனால், இதில் நன்மை களை விட பாதகங்களே அதிகம் என்பதால் கைவிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதுவரை உள்நாட்டில் மட்டுமே அரசு கடன் பத்திரங்கள் மூலம் நிதித் திரட்டப்பட்டுவந்தது. தற்போது முதன்முறையாக கடன் பத்திரங்கள் வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன.

அந்நிய செலாவணியில் நிதித் திரட்ட விரும்பினால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கடன் பத்திரங்களை வாங்க வைப்ப தற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடலாம். அதற்காக கடன் பத்திரங்களை அந்நிய செலாவணி மதிப்பில் வெளிநாடுகளில் விற் பனை செய்வது சரியான முடிவல்ல. கடன் பத்திரங்கள் இந்திய ரூபாய் அடிப்படையில் இருப்பதுதான் அர சுக்கு நல்லது என்பது என் கருத்து.

அரசின் இந்த முடிவால் பிற நாடு களைச் சேர்ந்த வணிக வங்கிகள் மட்டுமே பெரிய அளவில் லாப ஈட்டும். மாறாக அரசுக்கு பலன்கள் மிக மிகக் குறைவு. ஏனெனில் இதில் பல பிரச்சினைகள் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x