கிரீஸ் வங்கிகள் திறப்பு: விலைவாசி உச்சத்தால் மக்கள் அவதி

கிரீஸ் வங்கிகள் திறப்பு: விலைவாசி உச்சத்தால் மக்கள் அவதி
Updated on
1 min read

பொருளாதார சீர்திருத்த ஒப்பந்தத்தைத் தொடரந்து 3 வாரங்களுக்கு பிறகு கிரீஸ் நாட்டு வங்கிகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.

பொருளாதார நெருக்கடியால் சிக்கிக் கொண்டிருக்கும் கிரீஸில் கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் அனைத்தும் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் விதித்த கடன் மீட்பு திட்டத்தை கிரீஸ் அரசு ஏற்று தனது நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதாவை நிறைவேற்றியதை அடுத்து, அரசின் உத்தரவின்படி வங்கிகள் அனைத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கியுள்ளன.

மசோதாவின்படி வருவாய் வரியை அதிகரிப்பது, முதியோர் ஓய்வூதியங்களைக் குறைப்பது, செலவினங்களை கட்டுப்படுத்துவது, ஊழியர்களுக்கான சலுகைகளை திரும்பப் பெறுவது என பல திட்டங்கள் இடம்பெறுகின்றன.

உச்சகட்டத்தில் விலைவாசி

மதிப்பு கூட்டு வரி அதிகரித்துள்ளதால், அன்றாட உபயோக பொருட்கள் அனைத்தின் விலையும் உச்ச கட்டத்தில் அதிகரித்துள்ளது. மூன்று வாரங்களாக சந்தைகள் மூடிக்கிடந்த நிலையில், இன்று பொருட்களை வாங்கச் சென்ற மக்கள், விலைவாசியை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், மற்றும் பார்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் ஒட்டல் மற்றும் பார்களில் 13 சதவீதத்திலிருந்து 23 சதவீதம் அதிகமாக மக்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in