Published : 13 Jun 2015 10:11 AM
Last Updated : 13 Jun 2015 10:11 AM

என்சிடிஇஎக்ஸ் அறிமுகப்படுத்துகிறது `கோல்ட் நௌ’

முன்னணி பொருள் வர்த்தக சந்தையான என்சிடிஇஎக்ஸ் நேற்று தங்கத்துக்கான தேசிய சந்தையை, சென்னையை மையமாகக் கொண்டு தொடங்கியது. ‘கோல்ட் நௌ’ என்ற பெயரிலான ஆன்லைன் வர்த்தக சந்தையில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் முடியும்.

மத்திய அரசின் `மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த இணையதளம் தங்கத்தை வாங்கி அதை அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் சுத்திகரித்து விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் தங்கம் இறக்குமதி செய்வது குறையும்.

இது குறித்து என்சிடிஇஎக்ஸ் மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சமிர் ஷா கூறியது: தேசிய அளவில் இங்கு மையம் உருவாக்கப்பட்டதன் மூலம் சர்வதேச தரத்தில் தங்கம் இங்கு கிடைக்க வழியேற்பட்டுள்ளது.

இதன் மூலம் தென்னிந்திய நகை வர்த்தகர்களின் திறனும் மேம்பட வழியேற்பட்டுள்ளதாகக் கூறினார்.

கோல்ட் நௌ தளம் மூலம் ஒரு கிலோ மற்றும் 100 கிராம் தங்கத்தை முன்பேர வர்த்தகம் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x