Last Updated : 18 May, 2015 10:00 AM

 

Published : 18 May 2015 10:00 AM
Last Updated : 18 May 2015 10:00 AM

ஜனவரி முதல் மார்ச் வரை ரூ.16,400 கோடி எல்ஐசி முதலீடு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 12 பங்குகளில் சுமார் 16,400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் 12 சென்செக்ஸ் பங்குகளில் தன்னுடைய முதலீட்டை குறைத்திருக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய பங்குகளில் எல்.ஐ.சி. கடந்த சில காலாண்டுகளாக எந்த முதலீட்டையும் செய்யவில்லை. அதேபோல டாடா ஸ்டீல், பிஹெச்இஎல், வேதாந்தா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளில் ஏற்கெனவே செய்திருந்த முதலீட்டில் எந்தவிதமான மாறுதலையும் செய்யவில்லை.

இந்த காலாண்டில் அதிகபட்சமாக கோல் இந்தியா பங்கில் எல்.ஐ.சி. அதிகம் முதலீடு செய்திருக்கிறது. கோல் இந்தியாவின் 4.65 சதவீத பங்குகளை 10,754 கோடி ரூபாய் கொடுத்து எல்.ஐ.சி. வாங்கி இருக்கிறது.

12 நிறுவன பங்குகளில் 16,400 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருந்தாலும், 12 சென்செக்ஸ் பங்குகளில் 6,730 கோடி ரூபாய் அளவுக்கு விற்றிருக்கிறது. இந்த காலாண்டில் நிகர முதலீடாக 9,670 கோடி ரூபாயை சென்செக்ஸ் பங்குகளில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருக்கிறது.

கெயில், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., ஹிண்டால்கோ மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகளில் தன்னுடைய முதலீட்டை எல்.ஐ.சி. உயர்த்திருக்கிறது.

மாறாக, மாருதி சுசூகி, டிசிஎஸ், சிப்லா, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஐடிசி மற்றும் எல் அண்ட் டி ஆகிய பங்குகளில் தன்னுடைய முதலீட்டை எல்.ஐ.சி. குறைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x