Published : 11 May 2015 09:58 AM
Last Updated : 11 May 2015 09:58 AM

அனைவருக்கும் பான் கார்டு: மத்திய அரசு திட்டம்

அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தைத் (ஜன்தன் யோஜனா) தொடர்ந்து அனைவருக்கும் பான் கார்டு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் நடக்கும் அனைத்து வர்த்தகங்களுக்கும் பான் எண் அவசியம் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து இடங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பான்மையானவர்களிடம் பான் எண் இல்லை.

நாட்டில் 24 முதல் 25 கோடி குடும்பங்கள் உள்ளன. ஆனால் இதுவரை 21 கோடி பான் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் 7.5 கோடி பான் கார்டுகள் கார்ப்பரேட் கணக்குகள் ஆகும். பெரும்பாலான இந்தியர்களிடம் பான் கார்டு இல்லை என்பதை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா சமீபத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் பான் கார்டு வாங்கும் முறையை எளிதாக்குவோம் என்றார்.

தவிர, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு 48 மணிநேரத்தில் பான் கார்டு கிடைக்க வழி செய்வது மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x