Published : 17 Apr 2015 10:06 AM
Last Updated : 17 Apr 2015 10:06 AM

இவரைத் தெரியுமா?- ரிஷிகேஷ் பரந்தேகர்

ஆம்பிட் பின்வெஸ்ட் மற்றும் ஆம்பிட் பிரைவேட் வெல்த் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு கார்வி புரோக்கிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநராக பணியாற்றினார்.

மெக்கின்சி நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் மற்றும் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

வங்கி, காப்பீடு உள்ளிட்ட சொத்து நிர்வாகத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இந்தியா, அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

பிரச்சினைகள் சார்ந்த உத்திகள் வகுப்பதில் வல்லுனர்.

ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நிறுவனத்தில் பொறுப்புகள் இல்லாத இயக்குநராக 2006 லிருந்து பணியாற்றி வருகிறார்.

ஐஐஎம் அகமதாபாதில் இளநிலை மற்றும் மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x