Published : 19 Apr 2015 02:06 PM
Last Updated : 19 Apr 2015 02:06 PM
ரிலையன்ஸ் நிறுவனம் அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 1,400 பெட்ரோல் நிலையங்களையும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் ரிலையன்ஸ் மற் றும் எஸ்ஸார் நிறுவன பெட்ரோல் நிறுவனங்கள்தான் தனியார் நிறு வனங்களாகும். 2006-ம் ஆண்டுக்கு முன்பு வரை இவ்விரு நிறுவனங் களும் பெட்ரோல் விற்பனையில் 10 சதவீத சந்தையையும் டீசல் விற்பனையில் 17 சதவீத சந்தையையும் பிடித்திருந்தன. பெட்ரோல், டீசல் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட அதாவது மானிய விலையில் வழங்கியபோது இந்நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தன. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பெட்ரோல் நிரப்பு நிலையங்களை மூடியது.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 1,432 பெட்ரோல் நிரப்பு நிலை யங்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ளன. இவை அனைத்தும் 2008-ம் ஆண்டிலிருந்து செயல்பட வில்லை.
2010-ம் ஆண்டு பெட்ரோல் மீதான கட்டுப்பாடுகள் அகற்ற ப்பட்டு சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து சில நிலையங்களில் வெறும் பெட்ரோல் மட்டும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபரில் டீசல் மீதான மானியமும் முழுமை யாக நீக்கப்பட்டது. இதனால் இதுவும் சந்தை விலைக்கேற்ப விற்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் திறந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஸ்ஸார் நிறுவனமும் தற் போது அனைத்து நிலையங்களி லும் பெட்ரோலுடன், டீசலை யும் விற்பனை செய்யத் தொடங்கி யுள்ளது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 1,600 பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT