Published : 01 Apr 2015 10:30 AM
Last Updated : 01 Apr 2015 10:30 AM
சீனா தலைமையில் செயல்பட்டு வரும் ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கியில் (ஏஐஐபி) இணைய முடியாது என ஜப்பான் அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த வங்கியின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் இணைய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த வங்கியில் இணைவதற்கு மார்ச் 31-ம் தேதி இறுதிநாள் என சீனா தெரிவித்திருந்தது.
இந்த வங்கியில் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 40 நாடுகள் உறுப்பினராக உள்ளார்கள். ஆரம்ப கட்டமாக 5,000 கோடி டாலரில் இந்த வங்கி தொடங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT