Last Updated : 23 Apr, 2015 10:36 AM

 

Published : 23 Apr 2015 10:36 AM
Last Updated : 23 Apr 2015 10:36 AM

தெலங்கானாவில் மஹிந்திரா ஆலை விரிவாக்கம்

ரூ. 250 கோடி முதலீட்டில் இந்த ஆலை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த ஆலையில் புதிய சிறிய ரக வர்த்தக வாகனங் கள் உற்பத்தி செய்யப்படும். இந்த வாகனங்கள் நடப்பு நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையை தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார். இந்த ஆலை ஆண்டுக்கு 92 ஆயிரம் வாகனங் களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஏற்கெனவே இந்த ஆலை ஆண்டுக்கு 75 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாயிருந்தது. இப்போது கூடுதலாக 17 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே பகுதியில் மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் ஆலை தொடங்கப்பட்டது. இந்த ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் டிராக்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று நிறுவனத்தினரை முதல்வர் சந்திரசேகர் ராவ் கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x