Published : 21 Mar 2015 10:35 AM
Last Updated : 21 Mar 2015 10:35 AM
நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 22,574 கோடி ரூபாயை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக நிதித்துறை இணையமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு மத்திய அமைச் சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஓ.என்.ஜி.சி. மற்றும் பி.ஹெச்.இ.எல். ஆகிய நிறுவனங் களின் 5 சதவீத பங்குகளும், நால்கோ மற்றும் என்.எம்.டி.சி. ஆகிய நிறுவனங்களின் 10 சதவீத பங்கு விற்பனைக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது என்று மக்களவையில் ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்தார்.
மார்ச் 16-ம் தேதி பங்கு விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொகையை திரட்ட முடியும் என்று கூறிய அவர், எப்போது பங்கு விற்பனை என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்கு விலையில் தள்ளுபடி இருக்கும் என்று கூறினார்.
ஓ.என்.ஜி.சி. மூலம் 13,220 கோடி ரூபாயும், என்.எம்.டி.சி. நிறுவனம் மூலம் 5,040 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
வரும் நிதி ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற் பனை மூலம் 69,500 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர் ணயம் செய்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT