Published : 14 Mar 2015 11:35 AM
Last Updated : 14 Mar 2015 11:35 AM
மொபைல் காமர்ஸ் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் முதலீடு செய்திருக்கிறார். எவ்வளவு தொகை முதலீடு செய்தார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
எங்களது நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து ரத்தன் டாடா முதலீடு செய்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை விட சிறந்த ஆலோசகர் கிடைக்க முடியாது. என்று பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா தெரிவித்தார். கடந்த வருடம் ஸ்நாப் டீல் மற்றும் அர்பன்லேடர் ஆகிய நிறுவனங்களில் ரத்தன் டாடா முதலீடு செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT