Published : 28 Mar 2015 10:45 AM
Last Updated : 28 Mar 2015 10:45 AM

பொதுப்பங்கு வெளியிட இண்டிகோ திட்டம்?

இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் பெரும் பங்கினை வைத்திருக்கும் இண்டிகோ நிறுவனம் விரைவில் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாத இறுதியில் இதற்காக விண்ணப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த பங்கு வெளியீடு மூலம் 30 கோடி டாலர் முதல் 40 கோடி டாலர் வரை திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இன்னும் இரண்டு மாதத்தில் இதற்காக விண்ணப்பிக்கப்படும் என்றும் அனுமதி கிடைத்த பிறகு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பட்டிய லிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இன்டர்குளோப் என்டர்பிரை சஸ் என்னும் சர்வதேச விருந்தோம் பல், டிராவல் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் இண்டிகோ. ஒரே மாதிரியான விமானங்களை வைத்து இந்த நிறுவனம் லாபம் ஈட்டியது.

கடந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபமாக 478 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனம் ஈட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x