Last Updated : 25 Mar, 2015 10:37 AM

 

Published : 25 Mar 2015 10:37 AM
Last Updated : 25 Mar 2015 10:37 AM

வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்வு

வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் முதலீடு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 78,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப் பங்குகளில் முதலீடு இருக்கிறது.

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் 32,225 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் பண்ட்களின் முதலீடு இருந்தது. பிப்ரவரி மாத இறுதியில் 77805 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு இருந்தது. மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் வைத்திருக்கும் சொத்துகளின் மதிப்பு 3.65 லட்சம் கோடி ரூபாய்.

இதில் 21.32 சதவீதம் வங்கிப்பங்குகளில் இருக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வங்கிப்பங்குகளில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. இதற்கு முன்பு ஜனவரியில் 76,061 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு இருந்தது.

மென்பொருள் துறை பங்குகளில் 38,514 கோடி ரூபாயும், பார்மா துறையில் 23,980 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறையில் 24,074 கோடி ரூபாயும், நிதி துறை பங்குகளில் 23,080 கோடி ரூபாயும் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x