Published : 21 Mar 2015 10:16 AM
Last Updated : 21 Mar 2015 10:16 AM

இவரைத் தெரியுமா?- ஹபில் கொரகிவாலா

வொக்கார்ட் குழுமத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

1942-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். அகமதாபாத்தில் உள்ள கல்லூரியில் பார்மஸி படிப்பும், பர்தியூ பல்கலைக் கழகத்தில் மருந்து அறிவியலும் படித்தவர்.

ஹார்வர்டு நிர்வாகக் கல்லூரியில் நிர்வாகப் பயிற்சி பெற்றவர். சமீபத்தில் பர்தியூ பல்கலைக்கழகத்தில் கவுரவ முனைவர் பட்டமும் பெற்றவர்.

படித்து முடித்த பிறகு 20 பணியாளர்களுடன் மும்பையில் மருந்துக் கடையை அமைத்தார். ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் ஈட்டி வந்த நிறுவனத்தை இன்று வொக்கார்ட் குழுமமாக மாற்றி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவரது நிறுவனத்துக்கு பிரச்சினை வரும்போது நிறுவனத்தை விற்பது பற்றிய எண்ணம் ஏதும் இல்லை. 2,000 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

சிஐஐ, ஃபிக்கி உள்ளிட்ட அமைப்புகளில் பார்மா பிரிவு தலைவராக இருந்திருக்கிறார். அரசு குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 2004-ம் ஆண்டு எர்னஸ்ட் அண்ட் யங் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கி கவுரவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x