Published : 31 Mar 2015 10:21 AM
Last Updated : 31 Mar 2015 10:21 AM

இவரைத் தெரியுமா?- கவுரவ் சிங் குஷ்வாஹா

$ ஆன்லைன் தங்க நகை வர்த்தக நிறுவனமான புளூஸ்டோன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ டெல்லி ஐஐடியில் படித்தவர். இ-காமர்ஸ் மற்றும் இணையதள சந்தையில் 10 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்டவர்

$ இதற்கு முன்பு சாக்பாக் என்கிற ஆன்லைன் பொழுதுபோக்கு நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்தார்.

$ இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். 2011ல் இந்த நிறுவனத்தை பிளிப்கார்டுக்கு விற்பனை செய்தார்.

$ அமேசான் நிறுவனத்துக்காக ஐடி சேவை மற்றும் தீர்வுகள் பிரிவில் நான்கு வருடங்கள் பணியாற்றியவர். அமெரிக்க ஆன்லைன் சந்தையில் இணையதள பொருள்கள் விற்பனைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ இரண்டு வருடங்களில் இரண்டு முக்கிய நிறுவனங்களிலிருந்து முதலீடுகளை கொண்டு வந்தார். களரி கேபிடல், சாமா கேபிடல், ஆக்செல் பார்ட்னர்ஸ் போன்ற வென்ச்சர் கேபிடல் (துணிகர முதலீட்டு) நிறுவனங்கள் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

$ ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

$ ஒவ்வொரு திங்கள்கிழமையும் 20 புதிய தங்க நகை டிசைன்களை அறிமுகம் செய்கிறது இவரது நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x