Published : 24 Mar 2015 10:02 AM
Last Updated : 24 Mar 2015 10:02 AM
வாரத்தின் தொடக்க நாளான நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன. தொடர்ந்து நான்காவது நாளாக சந்தை சரிவைக் கண்டு வருகிறது. வங்கி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, முதன்மை பொருள்கள் துறை பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் சரிவைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நேற்று 69 புள்ளிகள் சரிந்து 28192 புள்ளிகள் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 8550 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது.
மார்ச் மாத டெரிவேட்டிவ் கான்ட்ராக்டுகள் இந்த வாரத்தில் முடிவடைய உள்ளதால் சந்தையில் இறக்கம் நிலவுகிறது என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இது ஏப்ரல் மாதமும் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித் துள்ளனர்.
சந்தை இறக்கமான நிலையிலும் என்டிபிசி 3.20%, ஹிண்டால்கோ 2.92%, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 1.73%, ஸ்டெர்லைட் 1.65%, கெயில் 1.63% ஏற்றத்தை கண்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT