Published : 29 Mar 2015 11:19 AM
Last Updated : 29 Mar 2015 11:19 AM
ஒரு குறிப்பிட்ட குழுமத்துக்கு கடன் கொடுக்கும் அளவினை குறைத்துக்கொள்ளுங்கள் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஒரு வங்கியின் முதலீட்டில் குறிப்பிட்ட குழுமம்/நிறுவனங்களுக்கு 25 சதவீதத்துக்கு மேல் கடன் கொடுக்க வேண்டாம் பரிந்துரை செய்திருக்கிறது. தற்போது இந்த அளவு 55 சதவீதமாக இருக்கிறது.
வங்கிகளின் ரிஸ்க் அளவினை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த பரிந்துரையை அளித்திருக்கிறது..
இந்த வரைவு வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வரும் என்றும், வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு வங்கியின் பங்குதாரர்களை கேட்டிருக்கிறது.
வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 71,080 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பரில் இந்த கடன் அளவு 2,60,531 கோடியாக அதிகரித்திருக்கிறது.
வங்கிகள் ஒரு நிறுவனத்தில் கூடுதலாக கடன் கொடுப்பதை படிப்படியாக குறைத்துகொள்ள வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT