Published : 06 Mar 2015 10:35 AM
Last Updated : 06 Mar 2015 10:35 AM

ஏற்றத்தில் பங்குச் சந்தை

ஏற்ற இறக்கமான வர்த்தக சூழலிலும் வர்த்தக முடிவு நேரத்தில் ஏற்றமான போக்கு நிலவியது. இருந்தாலும் ஏற்றத்தில் பங்குச்சந்தைகள் முடிவடைந்தன. முன்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 68 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 15 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. பார்மா, எப்எம்சிஜி மற்றும் ஆட்டொமொபைல் துறை களுக்கான அந்நிய முதலீடுகளின் வருகை அதிகரித்ததால் சந்தை உயர்ந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன.

சர்வதேச அளவில் அதிக உலோக நுகர்வைக் கொண்டி ருக்கும் சீனாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் உலோகத்துறை பங்குகளில் அது எதிரொலித்தது.

நேற்றைய வர்ததகத்தில் ஹெல்த்கேர் , பார்மா, எப்எம்சிஜி, பேங்கிங் துறை பங்குகள் ஏற்றமும், கேபிட்டல் குட்ஸ், மெட்டல் துறை பங்குகள் பங்குகள் சரிவையும் கண்டன.

இன்று ஹோலி பண்டிகை என்பதால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x