Published : 21 Mar 2015 10:37 AM
Last Updated : 21 Mar 2015 10:37 AM
மருந்து தயாரிப்பு நிறுவனங் களுக்கு ஊக்கத் தொகை அளித்ததில் உரிய விதிமுறை கள் பின்பற்றப்படவில்லை. இதனால் அரசுக்கு ரூ. 1,348 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கைத் (சிஏஜி) துறை குற்றம் சாட்டியுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக (ஆர் அண்ட் டி) செலவிட்ட தொகையை மீண்டும் கோரிப் பெற்றுள்ளன. அவ்விதம் கோரப்பட்ட செலவுத் தொகையை அந்த நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு செலவிட்டதா என்று முழுவதுமாக ஆராயாமல் தொகையை வருமான வரித்துறை திரும்ப அளித்துள்ளதாக சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இவ்விதம் பணம் திரும்பக் கோரும் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த மதிப்பீட்டு அதிகாரி (ஏஓ) டாக்டர்களுக்கு நன்கொடையாக அளித்த பரிசுப் பொருள் மற்றும் சில பொருள்களுக்கான தொகை யையும் திரும்ப அளித்துள்ளார். மருத்துவர்களுக்கு இவ்விதம் பரிசுப் பொருள் அளிப்பது சட்டப்படி தவறானது என்றும் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
ரான்பாக்ஸி, டாக்டர் ரெட்டீஸ், பிரமிள் ஆகிய நிறுவனங்களுக்கு இவ்விதம் பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
மொத்தம் 246 நிறுவனங் களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து சிஏஜி தனது அதிருப்தியை வெளியிட்டதோடு இது வருமான வரித்துறையின் செயல்பாடுகளில் காணப்படும் குறையையே காட்டுவதாக குறிப்பிட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT