Published : 10 Feb 2015 12:12 PM
Last Updated : 10 Feb 2015 12:12 PM

நெடுஞ்சாலைத் துறையில் இணையதள பண பரிவர்த்தனை: அமைச்சர் கட்கரி தொடங்கி வைப்பு

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக் கான பண பரிவர்த்தனைக்காக இணையதளம் மூலமான பண பரிவர்த்தனை முறை தொடங் கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்த வசதியை மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். இதன் மூலம் இத்துறை பணிகளுக்கான பண பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

காலக் கெடுவுடன் கூடியதாக இந்த பண பரிவர்த்தனை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தெந்த பணிகளுக்கான பணம் பரிவர்த்தனை செய்யப்பட் டுள்ளது, அதற்குரிய ரசீதுகளை அமைச்சகம் கண்காணிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அலுவலக ரீதியில் எவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது என்பதையும் எந்தெந்த திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என்ற அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை செயல்படுவது தொடர்பான கருத்துகளின் அடிப்படையில் இதில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்படும். இதன் மூலம் பண பரிவர்த்தனை முற்றிலுமாக திறம்பட செயல்பட வழியேற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மண்டல பொதுப்பணித் துறை அனுப்பும் ரசீதுகளை பிராந்திய அலுவலகங்கள் பரிசீலித்து அதன்பிறகு பண பரிவர்த்தனை செய்யப்படும். இவ்விதம் பரி சீலனை செய்த ரசீதுகளை பிராந்திய அலுவலகங்கள் பே அண்ட் அக்கவுண்ட்ஸ் அலுவலகத்துக்கு அனுப்பும். அவை பணபட்டுவாடா அதிகாரிக்கு அனுப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x