Published : 19 Feb 2015 11:47 AM
Last Updated : 19 Feb 2015 11:47 AM
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல்.காம் நிறுவனம் பிரீமியம் மற்றும் ஃபேஷன் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான எக்ஸ்குளூசிவ்லி.காம் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மூலம் ஸ்நாப்டீல்.காம் நிறுவனம் தனது ஃபேஷன் வர்த்தக தொழிலை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இதன்மூலம் 200 கோடி டாலர் மதிப்புள்ள ஜவுளி வர்த்தக சந்தையையும் கைப்பற்றியுள்ளது. எவ்வளவு தொகைக்கு நிறுவனம் கைமாறியது என்ற விவரம் வெளியாகவில்லை.
ஸ்நாப்டீல் நிறுவன வருமானத்தில் 60 சதவீத வருமானம் ஃபேஷன் சார்ந்த பொருள் விற்பனை மூலம் கிடைப்பதாகும்.
இந்தியாவில் ஆடம்பர ஜவுளி சந்தை மதிப்பு 1,400 கோடி டாலராகும். இது ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீத வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
எக்ஸ்குளூசிவ்லி.காம் விற்பனை தளத்தில் இந்தி யாவின் பிரபல ஆடை வடிவமைப் பாளர்களான மணீஷ் மல்ஹோத்ரா, தருண் தஹிலி யானி, மணீஷ் அரோரா, அனிதா டோங்ரே, ஹோஹித் பால், கௌரவ் குப்தா, ஜேஜே வாளயா, ரிது குமார், வருண் பாஹ்ல், ஷிவண் அண்ட் நரேஷ் மற்றும் நீனா லுல்லா ஆகியோரின் வடிவமைப்பில் உருவான ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
பிரத்யேக ஆடை வடிவமைப்பு மற்றும் இந்தியாவில் அதிகரித்து வரும் தனி மனித செலவழிக்கும் திறன் ஆகியன காரணமாக அதிக விலையிலான ஆடைகள் பயன்படுத்துவது அதிகரித் துள்ளது.
அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் வாங்குவதும் எளிதாக இருப்பதால் இத்தகைய சந்தை விற்பனை அதிகரித்து வரு கிறது என்று எக்ஸ்குளூசிவ்லி.காம் நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சய் குலேரியா தெரிவித் தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT