Published : 13 Feb 2015 11:33 AM
Last Updated : 13 Feb 2015 11:33 AM

ஃபோர்டின் புதிய முயற்சி

ஃபோர்டு நிறுவனம் வாடிக்கை யாளர்களைக் கவர புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிரத்யேக கார்களை தயாரித்து அளிக்க முடிவு செய்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இத்தகைய சேவையை அளிக்கும் முதலாவது நிறுவனம் என்ற பெருமையை ஃபோர்டு பெற்றுள்ளது.

இதன் மூலம் வாகன தயாரிப்பில் எந்தவித சமா தானமும் இன்றி தரமான தயாரிப்பை, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளர்களுக்கான தனித்துவமான காராக இவை உருவாக்கப்படுகிறது. எஸ்யுவி மாடல் காரான எகோஸ்போர்டில் இத்தகைய வசதியை அளிக்க ஃபோர்டு முன்வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது கார்கள் மற்றவற்றைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அத்தகைய தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் களுக்கான கார்கள் தயாரித்து அளிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கென சென்னை மறைமலைநகரில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தனி பகுதியை ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x