Published : 15 Feb 2015 12:43 PM
Last Updated : 15 Feb 2015 12:43 PM

தமிழகத்தில் ரூ. 4,000 கோடி முதலீடு செய்ய மஹிந்திரா முடிவு

ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் முக்கிய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தமிழ்நாட்டில் புதிய தொழிற் சாலை அமைக்க முடிவு செய்திருக்கிறது. இந்த தொழிற்சாலை ரூ. 4,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த முதலீடு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று நிறுவனத்தின் செயல் இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு அருகே 255 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யபோவதாக தமிழக அரசு உறுதி அளித்திருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

கூடிய விரைவில் இந்த நிலம் ஒதுக்கப்பட இருப்பதாகவும், வரும் மே மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சென்னையில் நடந்த விழாவில் கோயங்கா தெரிவித்தார்.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சரக்கு மற்றும் சேவை வரி பற்றி இந்த பட்ஜெட்டில் விரிவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x