Published : 11 Feb 2015 11:13 AM
Last Updated : 11 Feb 2015 11:13 AM

சென்னையில் முதலீட்டுக் கண்காட்சி

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் முதலீட்டுக் கண்காட்சி 2015 என்கிற முதலீட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடை பெற உள்ளது. பிப்ரவரி 14,15 இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடக்க உள்ளன.

இந்த கண்காட்சியில் ரிசர்வ் வங்கி, செபி, என்எஸ்டிஎல் மற்றும் சிடிஎஸ்எல் நிறுவனங்களிலிருந்து அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போ நிறுவனம் நடத்தும் இந்த கண்காட்சியில் நிதிச் சேவை துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் பங்கு பெறுகின்றன. பங்குச் சந்தை, பரஸ்பர நிதியம், காப்பீடு மற்றும் கடன் நிறுவனங்கள் பலரும் பங்கேற்கின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் துறையில் வீடு மனை விற்பனை செய்யும் நிறுவனங்களும் பங்கு பெறுகின்றன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x