Published : 05 Feb 2015 11:49 AM
Last Updated : 05 Feb 2015 11:49 AM

தொழிலதிபர் சிங்கானியா காலமானார்

ஜேகே குழுமத்தின் தலைவர் கௌர் ஹரி சிங்கானியா (80) மாரடைப்பால் காலமானார். ஜேகே குழுமத்தை உருவாக்கிய இவர் விளையாட்டில் தீவிர ஆர்வமுடை யவர்.

உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தை உருவாக்கியவரும் இவரே. இவரது மகன் ஒய் சிங்கானியா.

கல்வித் துறையில் இவரது பங்களிப்பு அதிகம். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பல்கலைக் கழகத்தை உருவாக்கியவரும் இவரே. ஜேகே எண்டர்பிரைசஸ் லிமிடெட், ஜேகே காட்டன் லிமிடெட், ஜேகே டிரேடர்ஸ் லிமிடெட் ஆகியவையும் இவரது குழும நிறுவனங்களாகும்.

இவரது மறைவுக்கு தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x