Published : 28 Feb 2015 10:21 AM
Last Updated : 28 Feb 2015 10:21 AM

பட்ஜெட் எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 262 புள்ளிகள் அதிகரிப்பு

பட்ஜெட் எதிர்பார்ப்பு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,பட்ஜெட் எதிர்பார்ப்பு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 262.33 புள்ளிகள் உயர்ந்து 29,482.45 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 74.65 புள்ளிகள் உயர்ந்து 8,919.25 புள்ளிகளாக இருந்தது. எரிசக்தி, ரியல் எஸ்டேட், வங்கித் துறை பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

முதல் முறையாக பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, வழக்கமாக சனிக்கிழமைகளில் விடுமுறையில் இருக்கும் பங்குச்சந்தைகள் இன்று இயங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x