Published : 10 Apr 2014 12:55 PM
Last Updated : 10 Apr 2014 12:55 PM

ஆர். காந்தி - இவரைத் தெரியுமா?

$ ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக இம்மாதம் நியமிக்கப்பட்டவர். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து மிக உயரிய பதவிக்கு உயர்ந்த தமிழர்.

$ இதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக பணியாற்றினார்.

$ 1980-ம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். வங்கித் துறையில் 33 ஆண்டுக்கால அனுபவம் மிக்கவர்.

$ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ரெய்கி சிகிச்சையை முறையாகப் பயின்றவர்.

$ கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகளில் ஆன்லைன் மூலம் பெருமளவு நிதியை பரிவர்த்தனை செய்வதை சாத்தியமாக்கியதில் இவரது பங்களிப்பு பிரதானமானது.

$ பங்குச் சந்தையில் முறைகேடு மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றும் நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள் மூலம் கடிவாளம் போட்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x