Published : 16 Feb 2015 12:21 PM
Last Updated : 16 Feb 2015 12:21 PM

பணியாளர்களை தகுதி மிக்கவர்களாக தயார்படுத்த வேண்டும்: இன்போசிஸ் பிரவீன் ராவ் தகவல்

தொழில்நுட்பங்கள் மாறி வரும் சூழ்நிலையில், ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை அந்த தொழில் நுட்பத்தில் தகுதிமிக்கவர்களாக தயார்படுத்த வேண்டும் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்ய பலர் தயாராக இருந்தாலும் ஏற்கெனவே இருக்கும் பணியாளர்களை தகுதிப்படுத்த வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரவீன் ராவ் தெரிவித்தார். ஐடி துறையில் பணியாளர்களை நீக்கும் போக்கு இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இவ்வாறு பிரவீன் ராவ் கூறினார். கடந்த மாதம் டிசிஎஸ் நிறுவனம் 1000க்கும் மேற் பட்ட பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனம் 2016-ம் ஆண்டுக்கு 20,000 பணியாளர்களை வளாகத் தேர்வு மூலம் நியமிக்க பணி ஆணை கொடுத்திருக்கிறது. ஆனால் எவ்வளவு நபர்கள் வந்து சேருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

2015-16-ம் நிதி ஆண்டில் ஐடி துறையின் வளர்ச்சி 12 முதல் 14 சதவீதம் வரை இருக்க கூடும் என்று ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்தது. ஆனால் இது குறித்த இன்போசிஸ் நிறுவனத்தின் கருத்தை தெரிவிக்க பிரவீன் ராவ் மறுத்துவிட்டார். எங்களது வாடிக்கையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவ தால், இப்போதைக்கு இந்த விஷயத்தில் கருத்த கூற இயலாது என்று தெரிவித்தார்.

மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x