Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM

6 பெருந்திட்டங்களை விற்பனை செய்ய யூனிடெக் முடிவு

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் யுனிடெக் நிறுவனங்கள் நிறைவேற்றியுள்ள பெருந்திட்டங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு 2 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் குர்காவ்னிலும், நொய்டாவில் மூன்றும், கொல்கத்தாவில் ஒன்றும் உள்ளன. இவற்றை விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 8 ஆயிரம் கோடி முதல் ரூ. 10 ஆயிரம் கோடி வரை இந்நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூனிடெக் நிறுவனம் பொதுவாக வர்த்தக வளாகங்களைக் கட்டி முடித்த பிறகு அதிலிருந்து வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x