Published : 20 Feb 2015 11:38 AM
Last Updated : 20 Feb 2015 11:38 AM
சாப்ட்வேர் துறை பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் முதலீடு செய்வது உயர்ந் திருக்கிறது. கடந்த ஜனவரி மாத முடிவில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 35,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தொகை 27,772 கோடி ரூபாயாக இருந்தது.
துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 35,463 கோடி ரூபாய் அளவுக்கு சாப்ட் வேர் துறை பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
மியூச்சுவல் பண்ட்கள் கையாளும் மொத்த சொத்து மதிப்பு (பங்குச் சந்தையில் மட்டும்) 3.55 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த நவம்பர் மாதம் 34,674 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
வங்கித்துறைக்கு பிறகு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது சாப்ட்வேர் துறைதான். வங்கித்துறையில் 76,000 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT