Published : 07 Feb 2015 11:10 AM
Last Updated : 07 Feb 2015 11:10 AM

‘முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும்’: அனில் அம்பானி ஆதங்கம்

கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பல தடைகளை சந்தித்து வருகி றோம். இதற்கு காரணம் அரசாங்கம் விரைவாக முடிவெடுக்காததுதான் என்று ஏடிஏஜி குழுமத் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.

மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய் திருந்த இந்த விழாவில் இவ்வாறு தெரிவித்தார். மகாராஷ்டிர முதல் வர் தேவந்திர பட்னவிஸ் தொழி லதிபர்களுடன் உரையாடினார். அப்போது இதனை அனில் அம்பானி தெரிவித்தார்.

நீங்கள் வேகமாக முடிவெடுப்பதற்கான திட்டத்தோடு வந்திருப்பீர்கள் என்று முதல்வரை பார்த்து கேட்டார். வேகமான முடிவெடுக்கும் போது மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய (சிவிசி) அதிகாரிகளின் ‘கண்பார்வை’ படுகிறது.

இதனால் அதிகாரிகள் முடிவெடுக்காமல் தள்ளிப்போடுகிறார்கள். மேலும் முடிவெடுக்காதபோது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் நினைக்கிறார்கள்.

அதற்காக மறைமுகமான முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை. எடுக்கப்படும் முடிவுகள் வெளிப்படையாக விரைவாக இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் வெளிப்படையாக முடிவெடுக்கும் எந்த அதிகாரிகளுக்கும் எந்த பிரச்சினையும் வராது என்றும் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x