Published : 24 Jan 2015 03:07 PM
Last Updated : 24 Jan 2015 03:07 PM

புதிய ஒப்பந்தங்களுடன் எஜூகோம்ப்

எஜூகோம்ப் நிறுவனம் அடுத்த நிதி ஆண்டில் புதிதாக 21 ஆயிரம் ஸ்மார்ட் பள்ளியறைகளுக்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் தனித்திறன் வளர்ப்பில் முன்னணியில் உள்ள எஜூகோம்ப் சொல்யூஷன் நிறு வனம் நாடு முழுவதும் சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது.

புதிதாக 21 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான ஒப்பந் தத்தை இந்த நிறுவனம் பெற் றுள்ளது. மேலும் நடப்பு அரை யாண்டில் 11 ஆயிரம் வகுப்பறை களுக்கான ஒப்பந்தங்களை மேற் கொண்டுள்ளது என்றும், நிதி ஆண்டின் அரையாண்டு காலத்தில் மேலும் 10 ஆயிரம் வகுப்பறை களுக்கான ஒப்பந்தம் உள்ளது என்று இந்த நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் ஸ்மார்ட் வகுப்பறைகள், மற்றும் டிஜிட்டல் வகுப்பறைகளில் கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம் என்றும், இந்த துறையில் சுமார் 50 சதவீத சந்தையை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப் பறைகள் மற்றும் கல்வித் துறை சம்மந்தமான தயாரிப்புக ளையும் எஜுகோம்ப் வழங்கி வருகிறது.

மார்ச் 2016க்குள் இந்த துறையில் 60 சதவீத சந்தை மதிப்புடன் எஜுகோம்ப் முன்னணியில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. நிறுவனம் ஸ்மார்ட் வகுப்பறை களுக்கான திட்டங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கம், 3டி மல்ட்டி மீடியா வகுப்புகள் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.

மாநில அரசுகளுடன் இணைந்து சுமார் 11 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் சேவைகளை செய்து வருகிறது. போர்ப்ஸ் ஆசியா வழங்கிய ‘பெஸ்ட் அண்டர் எ பில்லியன்’ நிறுவனங்கள் பட்டியலில் 35 நிறுவனங்களில் ஒன்றாக தேர் வானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x