Published : 10 Jan 2015 11:55 AM
Last Updated : 10 Jan 2015 11:55 AM

15 புதிய மாடல், ரூ. 150 கோடி முதலீடு: பென்ஸ் திட்டம்

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் நடப்பு ஆண்டில் 15 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய மாடல் காரான சிஎல்ஏ காம்பாக்ட் கார் அசெம்பிளிங் செய்வதற்காக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சக்கன் ஆலையில் ரூ. 150 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

சிஎல்ஏ காம்பேக்ட் கார்கள் இம்மாத இறுதியில் அறிமுகமாக உள்ளன. சக்கன் ஆலையில் இதுவரை ரூ. 1,000 கோடியை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இந்நிறுவனம் 10,201 கார்களை இந்தியாவில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 15 ஆக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x