Published : 24 Jan 2015 01:45 PM
Last Updated : 24 Jan 2015 01:45 PM
மும்பை பங்குச்சந்தை நேற்று புதிய உச்ச அளவை எட்டியது. சென்செக்ஸ் குறியீட்டு எண் 272 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 74 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் 1802 பங்குகள் இறக்கத்தையும், 1140 பங்குகள் ஏற்றத்தையும் சந்தித்தன. ஐரோப்பிய மத்திய வங்கியின் பொருளாதார சீர மைப்பு நடவடிக்கைகள் உலக வர்த்தக சூழலை மாற்றி வருகிறது. கடந்த ஏழு வர்த்தக நாட்க ளில் மும்பை பங்குச்சந்தை 1932 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. இது இதுவரையில் இல்லாத புதிய உச்ச அளவாகும். ஆர்பிஐ வட்டி குறைப்பு நடவடிக்கை எடுத்தால் சந்தையின் வளர்ச்சி மேலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT