Published : 29 Jan 2015 10:54 AM
Last Updated : 29 Jan 2015 10:54 AM
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் நாளை ( ஜனவரி 30) விற்பனை செய்யப்படும். இவை ஓஎப்எஸ் அடிப்படையில் விற்பனை செய்யப்படும்.
10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதால் சந்தை மதிப்பின்படி ரூ. 24 ஆயிரம் கோடி திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை 30-ம் தேதி தொடங்கி அன்றைய தினம் 3.30 மணிக்கு நிறைவடையும். மொத்தம் விற்பனை செய்ய உள்ள பங்குகளில் 20 சதவீதம் சிறிய முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும்.
பங்குகளுக்கான விலை வியாழக்கிழமை மாலை பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.
மும்பை பங்குச் சந்தையில் கோல் இந்தியா நிறுவனப் பங்குகள் 0.27 சதவீதம் உயர்ந்து ரூ. 384.05-க்கு வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் முதல் கட்டமாக 5 சதவீத பங்குகள் அதாவது 31.58 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இத்துடன் கூடுதலாக 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். கடந்த டிசம்பரில் செயில் பங்கு விற்பனை மூலம் ரூ. 1,700 கோடி திரட்டப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூ.43,425 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT