கோக கோலா ரூ.180 கோடி முதலீடு

கோக கோலா ரூ.180 கோடி முதலீடு
Updated on
1 min read

ஹிந்துஸ்தான் கோக கோலா நிறுவனம் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது. ஜல்பைகுரியில் பாட்டில் தொழிற்சாலையில் விரிவாக்கப்பணிகளுக்காக இந்த முதலீடு செய்யப்படும். மாநில அரசிடம் இருந்து நிலம் கிடைக்கும்பட்சத்தில் இந்தத் தொழிற்சாலைக்கான வேலை தொடங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வடக்கு வங்காளத்தில் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வழங்கியுள்ளார். இடத்துக்கான ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் விரிவாக்கப்பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in