Published : 08 Jan 2015 11:26 AM
Last Updated : 08 Jan 2015 11:26 AM

ஹஷ்முக் ஆதியா - இவரைத் தெரியுமா?

$ நிதிச்சேவைகள் பிரிவின் செயலாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மேலும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

$ 1981-ம் ஆண்டு குஜராத் பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இவரது தாய் மொழியும் குஜராத்திதான்.

$ குஜராத் பல்கலைக்கழகத்தில் பி.காம் மற்றும் எம்.காம் முடித்தவர். ஐஐஎம் பெங்களூருவில் முதுகலை பொது நிர்வாக பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றவர். மேலும் ஸ்வாமி விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் யோகாவில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

$ நிதிச் செயலாளராக நியமிக்கப்படும் முன்பு கூடுதல் தலைமை செயலளராக குஜராத் நிதி அமைச்சகத்தில் இருந்தார்.

$ மேலும் கல்வித்துறையின், முதன்மைச் செயலாளர், முதல் அமைச்சரின் முதன்மைச் செயலாளர் என குஜராத் மாநிலத்தில் பல முக்கியமான பொறுப்புகளை கையாண்டவர். தவிர குஜராத் அரசின் சில நிறுவனங்களுக்கு நிர்வாக இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

$ மனிதவளம் பற்றிய கட்டுரைகளை செய்திதாள்களில் எழுதிவருகிறார். மேலும் மனிதவளம் பற்றிய இரண்டு புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x