Published : 22 Dec 2014 10:17 AM
Last Updated : 22 Dec 2014 10:17 AM

கடனை மறுசீரமைப்பு செய்வது இரு மடங்கு அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகள் கடனை மறுசீரமைப்பு செய்வது அல்லது தள்ளுபடி செய்வது கடந்த 3 வருடங்களில் இருமடங்கு அதிகரித்திருக்கிறது. மார்ச் 2014 நிலவரப்படி இது 42,447 கோடி ரூபாயாக இருக்கிறது.

தொடர்ந்து இரண்டு நிதி ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழே இருந்தது தான் இதற்கு காரணமாகும். 2011-12-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் கடன் மறுசீரமைப்பு செய்யும் அளவு 20,752 கோடி ரூபாயாக இருந்தது. 2012-13-ம் ஆண்டில் 32,992 கோடி ரூபாயாக அதிகரித்து இப்போது 42,447 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் வங்கிகள் கடனை மறுசீரமைப்பு செய்த தொகை மட்டும் 1.61 லட்சம் கோடி ரூபாய். இது நாட்டின் ஜிடிபியில் 1.27 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x