Published : 25 Dec 2014 02:48 PM
Last Updated : 25 Dec 2014 02:48 PM
பார்தி ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அப்ளிகேஷனை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் ஸ்கைப், வாட்ஸ்அப் பயன் படுத்துவதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கான கட்டணங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது. இன் டர்நெட் மூலம் பேசும் வசதிக்கு (VoIP) இப்போதுதான் முதன் முறையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 3ஜி நெட்வொர்க் மூலம் 10 கேபி பயன்படுத்தினால் 4பைசா எனவும், 2ஜி நெட் வொர்க் மூலம் 10 கேபி பயன் படுத்தினால் 10 பைசா என்றும் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இதற்கென்று பிரத்யேக கட்டண விவரங்களை விரை வில் வெளியிட உள்ளோம் என்று ஏர்டெல் கூறியுள்ளது. தொலைபேசி நிறுவனங்கள் வாட்ஸஅப், ஸ்கைப், லைன், வைபர் போன்ற அப்ளி கேஷன்களை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துவரும் நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ஏர்டெல் இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT